தி.மு.க துணை பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி தனது 55-வது பிறந்த நாளை ஜனவரி 5-ம் தேதி கொண்டாடவிருக்கிறார். தி.மு.க துணை பொதுச்செயலாளராக அவர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால், அதை பிரமாண்டமாக கொண்டாட அவருடைய ஆதரவாளர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.
அதன்படி, கன்னியாகுமரியைச் சேர்ந்த அம்மு ஆன்றோ என்பவர் கனிமொழி உருவம் பொறித்த சேலைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறார். அந்த சேலையில், மறைந்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படங்களும், அண்ணா அறிவாலயம், தமிழ் உயிர் எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன.