இரானில் போராட்டங்கள் வலுத்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம், இரானின் முன்னாள் சீர்த்திருத்தவாதியும் ஜனாதிபதியுமான முகமது கடாமியின் உறவினர்களால் உருவாக்கப்பட்ட அந்நாட்டின் முக்கிய சீர்திருத்தக் கட்சியான யூனியன் ஆஃப் இஸ்லாமிக் இரான் என்னும் மக்கள் கட்சி, “கட்டாய ஹிஜாப் சட்டத்தை ரத்து செய்யவதற்கு வழி வகுக்கும் வகையில் சட்டத்தை தயார் செய்ய வேண்டும்” என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டது.
அதோடு கடந்த சனிக்கிழமை (3-12-22) அன்று, “அறநெறி காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் ” என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அட்டர்னி ஜெனரல் முகமது ஜாபர் மொண்டசெரி சனிக்கிழமையன்று (3-12-22) ISNA எனும் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், “அறநெறி காவல்துறையினரின் இத்தகைய கட்டுப்பாடுகள் ஒழிக்கப்பட்டுவிட்டது. அறநெறி காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.