தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை என்ன சொல்கிறது?

Share

கோப்புப் படம்

பட மூலாதாரம், FACEBOOK/GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப் படம்

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தில், 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே மாதம் 18ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணை ஆணையம், துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சரியான வகையில் காவலர் படை பயன்படுத்தப்பட்டதா, துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பாக உரிய அனைத்து முன்னெச்சரிக்கை நடைமுறைகளும் கடைபிடிக்கப்பட்டனவா என்பதைக் கண்டறியவும் இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரைக்கவும் அமைக்கப்பட்டது.

வன்முறைக்கு வாய்ப்பு – முன்பே கிடைத்த தகவல்

போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை திட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில நுண்ணறிவு துறை அனுப்பியுள்ளது. இது திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் (டிஐஜி) கபில்குமார் சராட்கர், காவல்துறை தென் மண்டல தலைவர் (ஐஜி) சைலேஷ்குமார் யாதவ் ஆகியோரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com