பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் பெண் கீழே விழுந்த விவகாரம் : ஓட்டுனர் மீது வழக்கு பதிவு
நேற்று முன்தினம் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்தில் திடீரென பிரேக் பிடித்ததால், பேருந்தின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் குழந்தையுடன் கீழே தலைகுப்புற விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பேருந்து ஓட்டுனர் மீது இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.