தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக வரிசையில் இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றாக அமருவார்களா?

Share

எடப்பாடி பன்னீர்செல்வம்

அஇஅதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையில் மோதல் நிலவும் நிலையில், எடப்பாடி தரப்பு புதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரைத் தேர்வு செய்துள்ளது. அதை ஏற்கக்கூடாது என்கிறது ஓ.பி.எஸ். தரப்பு. என்ன நடக்கும்?

அஇஅதிமுகவின் தலைமைப் பதவிக்கான போட்டியில் எடப்பாடி தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடவிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி கே. பழனிசாமியும் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வமும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு பொதுக் குழுவைக் கூட்டியது. அதில் எடப்பாடி கே. பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com