இதுவே விஷத்தன்மை உள்ள பூச்சிகள் உணவில் விழுந்து, அந்த உணவுகளை உட்கொள்வோருக்கு அதன் பாதிப்பு இன்னும் தீவிரமாக இருக்கும். எனவே, உணவு சமைக்கும்போது அதை ஆரோக்கியமாக, சுகாதாரமாக சமைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதைப் பத்திரப்படுத்துவதும் முக்கியம். உணவுகள் முழுமையாக சமைக்கப்பட வேண்டும். சமைத்த உணவுகளை சரியாக மூடி வைக்க வேண்டும்.
பொதுவாகவே பலருக்கும் பல்லிகளைக் கண்டால் பயமோ, அருவருப்போ இருப்பது இயல்பு. சாதாரணமாக வீடுகளில் காணப்படுகிற பல்லிகள் விஷத்தன்மை அற்றவை. அவை உணவுகளில் விழும்போது சிறுநீரோ, மலமோ கழிக்கலாம். பல்லிகளின் சிறுநீரும் மலமும் நச்சுத்தன்மை அற்றவை என்றாலும் சிலருக்கு அவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதன் காரணமாக வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படலாமே தவிர, பல்லிகள் விழுவதால் உணவு நஞ்சாவதில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.