இப்படி பரிசோதனை செய்து காரணம், கண்டறிவதற்குள் வந்து குணமாகும் காய்ச்சலை ஊடகவெளியில் மர்மக்காய்ச்சல் என்று சொல்கிறார்கள். மற்றபடி மர்மக்காய்ச்சல் என்று எதுவும் இல்லை. காய்ச்சல் வந்தால், அது 2-3 நாள்களுக்கு மேல் தொடர்ந்தால் அதற்கான பரிசோதனையை மேற்கொண்டு, சரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில வகை காய்ச்சல், மருந்துகளின் தேவையின்றி தானாகவே சரியாகிவிடும். அவற்றை ‘செல்ஃப் லிமிட்டிங்’ என்று சொல்வோம். மற்றபடி மர்மக்காய்ச்சல் என்பது பரபரப்புக்காக சொல்லப்படுகிற வார்த்தைதானே தவிர, உண்மையில் அப்படி எதுவும் இல்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.