ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருளை அதற்குள் குழந்தையின் சருமத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டாமே…. குறிப்பாக மஞ்சள்… இது குழந்தையின் சருமத்துக்கு பெரிய ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இப்படி நலங்கு மாவில் சேர்க்கப்படுகிற ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வாமை தன்மை இருந்தால் அது குழந்தையின் சருமத்தை பாதிக்கக்கூடும் என்பதால்தான் நலங்குமாவு வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிட்டுக் குளிப்பாட்டுவதும் தேவையற்றது. குழந்தையின் சருமத்தில் இயல்பிலேயே எண்ணெய்ப்பசை அதிகமிருக்கும். அதுவே குழந்தைக்குப் போதுமானது. தவிர, எண்ணெய் தடவுவதால் குழந்தையின் சருமத்தில் கட்டிகள், இன்ஃபெக்ஷன், அலர்ஜி போன்றவை உருவாக நாமே வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதாகி விடும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.