`ஜெர்ஸியைத் தவிர எதுவும் மாறல’ – கேட்ச் ட்ராப்கள்; டெத் ஓவர் சொதப்பல்கள்; ஆஸியிடம் வீழ்ந்த இந்தியா! | India faced a shocking defeat against Australia in the first T20 match

Share

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி ரொம்பவே எளிதாக 4 விக்கெட் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்றிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச்சே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் இந்திய அணியின் செயல்பாட்டில் பெரிய ஏமாற்றமில்லை. ரோஹித்தும் கோலியும் சீக்கிரமே வெளியேறியிருந்தாலும் மற்ற வீரர்கள் நின்று அதிரடி காட்டினர். ஆசியக்கோப்பையில் கே.எல்.ராகுல் அவ்வளவு சிறப்பாக ஆடியிருக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். “கோலியும் ஒரு ஓப்பனிங் ஆப்சன்தான், ஆனாலும் ராகுல்தான் என்னோடு ஓப்பனிங் இறங்குவார்” என ரோஹித் இந்தப் போட்டிக்கு முன்பாகப் பேசியிருந்தார்.

ஹேசல்வுட், க்ரீன் ஆகியோரின் ஓவர்களில் ஸ்கொயர் லெக், மிட் விக்கெட் ஆகிய திசைகளில் ராகுல் அடித்த அடிகள் குதூகலத்தை உண்டாக்கின. அரைசதத்தைக் கடந்து ஹேசல்வுட்டின் பந்திலேயே ராகுல் அவுட்டும் ஆகியிருந்தார். ராகுல் கொடுத்த நல்ல தொடக்கத்தை அடுத்தடுத்த வீரர்களும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஒரு சங்கிலித் தொடர் வினை போல ராகுலில் தொடங்கி அடுத்து சூர்யகுமார் அடுத்து ஹர்திக் பாண்டியா என மூவருமே ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். க்ரீன் வீசிய 20வது ஓவரின் கடைசி 3 பந்துகளையும் ஹர்திக் சிக்ஸராக்கி இந்திய அணிக்கு ஒரு வெறித்தனமான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இந்திய அணி 208 ரன்களை எட்டியது. ஹர்திக் 30 பந்துகளில் 71 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

இதுவரை இந்திய அணி சிறப்பாகவே ஆடிக்கொண்டிருந்தது. டார்கெட்டை டிஃபெண்ட் செய்ய பந்தை கையில் எடுத்த சமயத்தில்தான் பிரச்னையே ஆரம்பித்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தையே லாங் ஆஃபில் பெரிய சிக்ஸராக்கியிருந்தார் ஃபின்ச்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com