
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? கேப்டன் ரோகித் என்ன சொல்லியுள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம்.
இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. நிதானமாக இன்னிங்ஸை தொடங்கி ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள். இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். மொத்தம் 19 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை விளாசி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது பாகிஸ்தான் அணி. குறிப்பாக முகமது ரிஸ்வான் மற்றும் நவாஸ் கூட்டணி சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர்.