
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 289 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில் சதம் விளாசினார். இஷான் கிஷன் அரைசதம் பதிவு செய்தார்.
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்றாவது போட்டி தற்போது ஹராரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.