இலங்கை: 12 மணிநேரத்துக்குள் 3 சிறைகளில் மோதல்; என்ன நடந்தது?

Share

இலங்கை சிறைச்சாலை
படக்குறிப்பு, பல்லன்சேனை சிறைச்சாலை

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இலங்கையில் மூன்று சிறைச்சாலைகளில் 12 மணிநேரத்துக்குள் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மூன்று பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பு நியூமெகஸின் சிறைச்சாலை, குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேனை சிறைச்சாலை ஆகியவற்றிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

மூன்று சிறைச்சாலைகளிலும் ஏற்பட்டிருந்த பதற்ற நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாடுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்த சிறைச்சாலைகள் மாத்திரமன்றி, இலங்கை முழுவதும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை திணைக்களம் மேலும் குறிப்பிடுகின்றது.

இதனிடையே, சிறைச்சாலைகளின் அவசர நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்து ஆராய்வதற்காக கூட்டுப் பொறிமுறை ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com