இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் அணியின் தூணாக விளங்கியவருமான அஜின்கியா ரஹானே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை.30) அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஹானே குறித்து உடன் பயணித்த ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றனர்.

ரோஹித் சர்மா வெளியிட்டிருக்கும் பதிவில், “நாம் பல வருடங்களாக டிரெஸிங் ரூம்மைப் பகிர்ந்து வந்திருக்கிறோம். ரஹானே சாதித்தற்குப் பின்னால் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறது என்று எனக்கு தெரியும்.
அர்ப்பணிப்பும், தொழில்முறையும் உங்களைத் தனித்து காட்டி இருக்கின்றன. அற்புதமான கிரிக்கெட் வாழ்கைக்கு எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருக்கிறார்.