ராஸ் லஃப்பான்: கத்தார் எரிவாயு தொழிற்சாலையில் வெடிப்பு – 12 இந்தியர்கள் மரணம்

Share

கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் ஏற்பட்ட வெடிப்பு இரவு வானத்தை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரச் செய்கிறது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தின் AFPTV வீடியோ காட்சியின் ஒரு ஃபிரேம்.

கத்தாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 66 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்பதை கத்தார் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் உள்ள நகரத்தின் முக்கிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சுத்திகரிப்பு நிலையத்தில் “தொழில்நுட்ப விபத்து” ஒன்று ஏற்பட்டதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது, இந்த வெடிப்பு காரணமாக நகரத்தின் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது.

இந்த வெடிப்பு நாட்டின் ஏற்றுமதியைப் பாதிக்காது என்று கத்தாரின் எரிசக்தி அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி கூறினார், மேலும் “இது ஒரு விபத்து, இது நாசவேலையோ அல்லது விரோதப் போக்கோ கொண்டதல்ல” என்றும் அவர் கூறினார்.

ராஸ் லஃப்பான் துறைமுகம் உலகின் மிகப்பெரிய மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைத் துறைமுகமாகும், மேலும் இது உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி வசதியைக் கொண்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரானிய தாக்குதல்களால் இலக்கு வைக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த வெடிப்பு ஜன்னல்களை அதிர வைத்ததுடன், மத்திய தோஹா முழுவதிலும் உணரப்பட்டது, இது ராஸ் லஃப்பானில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com