ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.14) ஆட்டத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதின.
இதில் கொல்கத்தாவை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை அணி.
போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரஹானே, “பேட்டிங்கில் எங்களுக்குச் சரியான வேகம் கிடைக்கவில்லை.
பந்துவீச்சைப் பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகத்தான் செயல்பட்டோம்.
சிஎஸ்கே அணி பவர்பிளே ஓவர்களில் 70 ரன்களுக்கு மேல் குவித்த போதிலும், அவர்களை 192 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்கள் பந்துவீச்சாளர்களின் சிறந்த உழைப்பு.
ஆனால் பேட்டிங்கில் பவர்பிளே ஓவர்களில் நாங்கள் வெறும் 36 அல்லது 37 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அங்குதான் நாங்கள் பின்னடைவைச் சந்தித்தோம்.