ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்12) நடைபெற்ற மும்பை vs பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய பெங்களூரு அணி கேப்டன் ரஜத் பட்டிதார், “இப்போது நான் மிகவும் அற்புதமாக உணர்கிறேன். நாங்கள் எப்போது மும்பை வந்தாலும், குறிப்பாக இந்த மைதானத்தில் விளையாடும்போது, இங்கிருக்கும் சூழல், ரசிகர்கள் நிறைந்திருக்கிற ஸ்டேடியத்தில் விளையாடுவது ஒரு தனி உணர்வைத் தருகிறது.
ஒவ்வொரு வீரருக்கும் ஒரு தெளிவு இருந்தது என்றுதான் நான் சொல்வேன். விராட் பாயும், சால்ட்டும் இன்னிங்ஸைத் தொடங்கிய விதம் எங்களை முன்னிலையில் கொண்டு சென்றது.