மற்ற அணியில் உள்ள வீரர்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஓர் அணியாக செட் ஆகிவிட்டார்கள்.
ஆனால் எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் புதிதாக இணைந்துள்ளனர்.
அவர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரே அணியாக களமிறங்கி ஜெயிப்பதற்கு கொஞ்சம் காலம் எடுக்கிறது.
சென்னை மைதானத்தின் பழைய சூழல் பல ஆண்டுகளாக எங்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் இப்போது பிட்ச் தன்மைகள் மாறிவிட்டன.
ஆடுகளங்கள் இப்போது பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், அதற்கு ஏற்றவாறு எங்கள் திட்டங்களையும் வீரர்களின் தேர்வையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
தற்போதைய பின்னடைவுகளில் இருந்து மீண்டு வர நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இன்று தனது 4வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்ளும் சிஎஸ்கே தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்று ரசிகர் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர்.