ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 8) விறுவிறுப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.
கடைசி வரை த்ரில்லாகச் சென்ற இந்தப் போட்டியில், டெல்லி அணி இலக்கை எட்ட முடியாமல் நூலிழையில் தோல்வியடைந்தது.
போட்டிக்கு பிறகு தோல்வி குறித்து பேசிய அக்சர் படேல், “நிச்சயமாக, இன்று இரண்டு அணிகளுமே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.
இது போன்ற மிக நெருக்கமான ஆட்டங்களில், தோல்விக்கான காரணங்களாக நீங்கள் எதை வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம்.
நாங்கள் நன்றாகவே விளையாடினோம், ஆனால் இலக்கைத் துரத்தும்போது இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.