என்னுடைய கேரக்டர் சாதாரணமானதுதான். எங்களுடைய இயக்குநரும், ரைட்டரும் சேர்க்கிற விஷயங்கள்தான் கலகலப்பாக மாத்துச்சுனு சொல்லலாம். அதுகூட எங்க சீரியல் டீமோட பங்களிப்பும் முக்கியம்ங்க! நியாஸ் கான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ஏன்னா, அவரைப் பார்த்துதான் நான் வொர்க் அவுட் பண்ணனும்ங்கிற எண்ணத்துக்கே வந்தேன்.
அது மாதிரி ஸ்வாதியும் அற்புதமான நடிகை. என் மாமியாராக நடிக்கிற ப்ரீத்தி மேம் பத்தியும் சொல்லணும். இப்போதும், காலையில 4 மணிக்கு எழுந்து ரொம்ப தூரத்துல இருந்து ஷூட்டுக்கு வர்றாங்க.
அதே மாதிரி, சீரியல்ல என்னுடைய மனைவியாக வர்ற கிருத்திகாவும் நான் காமெடிக்கான விஷயங்கள் பண்றதுக்கு இடம் கொடுக்கிறாங்க. ஒரு முறை என்னுடைய மனைவி என்னுடைய தலையில அடிச்சாங்க. நான் என்னடானு திரும்பி பார்த்து அவங்களை முறைச்சு பார்த்தேன்.
அப்போ அவங்க ‘சீரியல்ல மட்டும் அடி வாங்குறீங்க, இங்கையும் வாங்குங்க’னு ஜாலியாகச் சொன்னாங்க” எனப் பலமாகச் சிரித்தவர் அவருடைய சினிமா பயணம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.
“ஊர்ல இருந்து சென்னைக்குக் கிளம்பி வந்த நான் முதல்ல சீரியல்லதான் உதவி இயக்குநராகப் பயணத்தைத் தொடங்கினேன். அங்கதான் சமுத்திரக்கனி சாருடைய நட்பும் கிடைச்சது.
பிறகு, அங்கிருந்து விக்ரமன் சார்கிட்ட உதவி இயக்குநராகச் சேர்ந்து ‘வானத்தைப் போல’, ‘உன்னை நினைத்து’ என ரெண்டு படங்களில் வேலை பார்த்தேன். நான் விக்ரமன் சார்கிட்ட வேலைக்குச் சேர்ந்ததே பெரிய கதைங்க! அவர் உதவி இயக்குநர் தேடிட்டு இருக்கார்னு எனக்கு தகவல் சொன்னாங்க.