இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) 2026-ம் ஆண்டிற்கான நமன் விருது விழா நேற்று( மார்ச்.15) நடைபெற்றிருக்கிறது.
இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
விருதை வாங்கியப் பிறகு மேடையில் பேசியிருக்கும் ராகுல் டிராவிட் , ” இந்த விருதைப் பெறுவது மிகவும் பெருமையாக இருக்கிறது.

நான் இதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலம் முதல் இன்று வரையிலானத் தனது நீண்ட பயணத்தை இது பிரதிபலிக்கிறது.
ஒரு சிறுவனாக, முதன்முதலில் 15 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கினேன்.
அன்று முதல் இன்று வரை எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.