2026 சட்டமன்ற தேர்தல் – காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறினால் திமுக என்ன செய்யும்?

Share

2026 சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, திமுக, காங்கிரஸ், கூட்டணி

பட மூலாதாரம், Getty Images

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

விரைவில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்தை காங்கிரஸின் ஒரு பகுதியினர் தீவிரமாக முன்வைத்துள்ளனர்.

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி எதை நோக்கிச் செல்கிறது? என்ற கேள்வி உள்ள நிலையில் அந்த உறவு மிகக் குழப்பமான சூழலை நோக்கிச் செல்வதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 15) நடந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் “கூட்டணியில் கூடுதல் இடங்கள், அதிகாரத்தில் பங்கு” என பல கோஷங்களை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

கூட்டணி ஆட்சி கிடையாது என்பதை தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துவிட்ட நிலையிலும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட கமிட்டி ஒன்று இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதுதான் கவனிக்க வைத்திருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும், உள்ளாட்சித் தேர்தலின்போது 30 சதவீத பங்கு வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com