அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், ” திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என காத்திருக்கிறோம்.
திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாத சக்திகளை எதிர்ப்போம்.
எங்களுக்கும் லட்சியங்கள் உள்ளன. கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான தீர்க்கமான பேச்சுவார்த்தை தேவை.
கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து,காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கிடையாது.
திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து தவெக உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “உங்கள் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.