பியானா வாத்ரே மோமின் 70 வயதில் எக்கோ பட நாயகியாகி இந்திய சினிமாவை ஈர்த்த கதை

Share

பியானா வாத்ரே மோமின்

    • எழுதியவர், சுதா ஜி திலக்

70 வயதில், பியானா வாத்ரே மோமின் வீட்டிலிருந்து வெகு தூரம் செல்ல துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார்.

ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியரான இவர், வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள காரோ மலையில் நான்கு நாய்களை வளர்த்துக்கொண்டு, தன் பேரப்பிள்ளைகளை அன்புடன் பார்த்துக்கொண்டு, எங்கே அமைதியான குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தாரோ – அங்கிருந்து திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து தெற்கே கேரளாவுக்குச் சென்றார்.

அவர் தனக்குப் புரியாத ஒரு மொழியைக் கையாள வேண்டியிருந்தது, ஷூட்டிங் தொடங்கிய பின்னரே அவர் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தின் முழு விவரம் தெளிவானது.

அந்தப் படம் ‘எகோ’ , அவரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஒரு மலையாள மொழித் திரைப்படம்.

காரோ பழங்குடியினத்தைச் சேர்ந்த மோமினுக்கு நடிப்பு என்பது ஒருபோதும் லட்சியமாகவோ அல்லது தொலைதூர ஆர்வமாகவோ இருந்ததில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com