நானும் அவருக்கு துணையாக டியூஷன் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தேன். 200க்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி பெற்றனர்.
நான் டியூஷன் கிளாஸில் பாடம் நடத்துவதற்கு வசதியாக சிறப்பு மேடை அமைக்கப்பட்டது. கல்லூரியில் பேராசிரியர் வேலையில் சேருவதற்காக 7 கல்லூரிகளில் நேர்காணலுக்கு சென்றேன். ஆனால் எங்கேயும் வேலை கிடைக்கவில்லை.
குஜராத்தில் மாற்றுத்திறனாளிக்கான இடஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பேராசிரியர் வேலைக்கு விண்ணப்பித்தேன்.
மூன்று முறை எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இறுதியாக நான்காவது முறையாக நான் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
சமுதாயத்தில் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் கூட என்னால் பேராசிரியராக வர முடியாது என்று நினைத்தனர். அதோடு குறைவான உயரம் காரணமாக மாணவர்களை சமாளிக்க முடியாது என்றும் எண்ணினர். ஆனால் என்னால் மாணவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்போதே, அவர்களை சமாளிக்கவும் முடிந்தது.
எனது உயரம் காரணமாக எனக்கு டிரைவிங் லைசென்ஸ் கொடுக்க மறுத்தார்கள். நான் மூன்று ஆண்டுகள் போராடிய பிறகு, 2023ஆம் ஆண்டில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றேன்.
அதன் பின்னர் முதல் நான் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இப்போது எனக்கு வேலை கிடைத்திருக்கும் அகமதாபாத் கல்லூரிக்கு தினமும் காரில் சென்று வருகின்றேன்” என்று தெரிவித்தார். திறமை இருந்தால் சாதிக்க உயரம் ஒரு தடை அல்ல என்பதை இப்பெண் நிரூபித்து இருக்கிறார்.