தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது.
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளைத் தழுவி வரும் இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
“இந்திய மண்ணில் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் எதிரணிகள் பயப்படுவார்கள்.
ஆனால் இப்போது இந்திய அணியுடன் விளையாட வேண்டுமென்றால் உற்சாகமாக இருக்கிறார்கள்.
கடந்த 12 மாதங்களில், இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ் ஆகி இருக்கிறது.
இது இந்திய கிரிக்கெட்டிற்கு மோசமான காலம்.