இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்திய 13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது.
அரை நூற்றாண்டு காலப் போராட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அனைவரின் கூட்டு முயற்சியால் முதல் உலகக் கோப்பை வசப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபோது சுனில் கவாஸ்கர் தனக்கு அளித்த வாக்குறுதியைச் சுட்டிக் காட்டி தான் ரெடியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கெதிரான அரையிறுதியில் சேஸிங்கில் ஜெமிமா 40+ ஓவர்கள் அசராமல் ஆடி சதமடித்து கடைசிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெறவைத்தார்.
அப்போது சுனில் கவாஸ்கர், “இந்தியா உலகக் கோப்பையை வென்றால், அவருக்கு (ஜெமிமா) ஓகே என்றால் அவருடன் சேர்ந்து பாடுவேன். அவர் தனது கிட்டாரை எடுத்துக்கொள்ளட்டும், நான் பாடுகிறேன்.