இந்த இடத்தில்தான் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த அமெலியா கெர்ரை 45 ரன்களில் அவுட்டாக்கி போட்டியை இந்தியா பக்கம் இழுத்தார் ஸ்னே ராணா.
அடுத்து வந்த மேடி கிரீன் 18 ரன்களில் அவுட்டானாலும் அதன்பிறகு இணைந்த ப்ரூக் ஹாலிடே, இசபெல்லா கேஸ் ஜோடி இந்தியாவை அச்சுறுத்தத் தொடங்கியது.
ப்ரூக் ஹாலிடே அரைசதம் கடக்க இவர்கள் கூட்டணி 70 ரன்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

பின்னர், 39-வது ஓவரில் ப்ரூக் ஹாலிடேவை 80 ரன்களில் ஸ்ரீ சரணி அவுட்டாக்கியதும் வெற்றி கிட்டத்தட்ட இந்தியாவுக்கு உறுதியானது.
கடைசி 6 ஓவர்களில் நியூசிலாந்த்தின் வெற்றிக்கு 99 ரன்கள் தேவைப்பட்ட சூழலில் அந்த அணியால் 44 ஓவர்கள் முடிவில் 271 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
95 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரி உட்பட 109 ரன்கள் அடித்த மந்தனா ஆட்ட நாயகி விருதை வென்றார்.