ஆம்ப்ரோஃபோபியா Phobia: மழை மீதான பயம் குறித்து தெரியுமா? அறிகுறிகள் & தீர்வு என்ன?

Share

ஆம்ப்ரோஃபோபியா, மழை, வெள்ளம், வானிலை, சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2015, டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம்.

    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டு மக்கள் பலருக்கு ‘சுனாமி’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை 2004, டிசம்பர் மாதம் கற்றுக்கொடுத்ததைப் போல, ‘செம்பராக்கம் ஏரியின்’ முக்கியத்துவத்தை 2015, டிசம்பர் மாதம் கற்றுக்கொடுத்தது, குறிப்பாக சென்னைவாசிகளுக்கு.

சென்னை அதற்கு முன்பு, 1943, 1978, 2005 ஆகிய ஆண்டுகளில் கடுமையான மழை வெள்ளத்தை பார்த்திருந்தாலும் கூட, 2015 வெள்ளம் சென்னைவாசிகள் பலருக்கும் கனமழை குறித்த ஒரு பயத்தை உருவாக்கிவிட்டது என்றே கூறலாம்.

ஆனால் கனமழை என்றில்லாமல், ஒரு சிறு தூறலுக்கு கூட பயப்படுவது பற்றி கேள்விப்பட்டதுண்டா? மழை பெய்வதைக் கண்டு அல்லது அதை நினைத்து ஏற்படும் அதீத பயத்திற்கு ‘ஆம்ப்ரோஃபோபியா’ (Ombrophobia) எனப் பெயர். அதன் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஆம்ப்ரோஃபோபியா, மழை, வெள்ளம், வானிலை, சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்ட்ராஃபோபியா என்பது இடி, மின்னல் குறித்த பயம்

இயற்கைச் சூழல் குறித்த பயங்கள்

அமெரிக்க மனநல சங்கம், ஃபோபியா (Phobia) என்பதை ‘ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சூழ்நிலையைப் பற்றிய பயம் அல்லது பதற்றம்’ என்று வரையறுக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com