ஆப்கானிஸ்தான் தாலிபன் அமைச்சரின் இந்தியப் பயணத்தால் பாகிஸ்தானுக்கு என்ன கவலை?

Share

ஆப்கானிஸ்தான் தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தான் தாலிபன் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி சமீபத்தில் ஆறு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, தாலிபன் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுதான்.

உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா காபூலில் உள்ள தனது தூதரகத்தை மீண்டும் திறக்கும் என்று அறிவித்தது.

முத்தக்கியின் இந்தியப் பயணத்தின் நடுவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் இரு நாடுகளும் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தன.

இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே தோஹாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. உடனடியாகச் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக கத்தார் கூறியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com