இரான் இஸ்ரேலை ஏவுகணை, டிரோன் மூலம் தாக்கிய இரவில் என்ன நடந்தது? அமெரிக்க போர் விமானிகளின் அனுபவம்

Share

இரானை எதிர்த்து, அமெரிக்க விமானிகள் இஸ்ரேலை காத்த இரவு

பட மூலாதாரம், US Air Force photo by Staff Sgt. Trevor T McBride

படக்குறிப்பு, எரிபொருள் நிரப்பிய பிறகு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம். இந்த புகைப்படம் அமெரிக்க விமானப்படை ஆவண காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

அன்று ஏப்ரல் 13, 2024- இரவு நேரம்.

பல தசாப்தங்கள் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரான் முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தியது.

அந்த ஆண்டு ஏப்ரலில் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியிருந்தது. இதில் இரான் புரட்சிகர காவலர் படையின் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர். டமாஸ்கஸ் தூதரக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏப்ரல் 13-ஆம் தேதி இஸ்ரேல் மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக இரான் தெரிவித்தது.

இரான் இந்த நடவடிக்கைக்கு “உண்மையான வாக்குறுதி” என்று பெயரிட்டதுடன், ‘இஸ்ரேல் மீதான அதன் தாக்குதல் மக்களைக் கொல்லும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக பதிலடி கொடுக்கும் தனது திறனை நிரூபிப்பதற்கான சான்று’ என்று எச்சரித்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com