இந்திய மருத்துவர்களின் கையெழுத்து பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது ஏன்?

Share

"தெளிவான மருந்துச்சீட்டு என்பது ஒரு அடிப்படை உரிமை". அது உயிரோடு இருப்பதற்கும், இறப்பதற்கும் காரணமாக அமையலாம் என்று நீதிமன்றம் கூறியது.

பட மூலாதாரம், Chilukuri Paramathama

படக்குறிப்பு, கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு மருத்துவர் எழுதிய படிக்க முடியாத மருந்துச் சீட்டு வைரலானது.

பெரும்பாலானவர்கள் கீபோர்டை பயன்படுத்தி எழுதி வரும் தற்கால சூழலில், கையெழுத்து தெளிவாக இருப்பது முக்கியமா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால், ஒரு மருத்துவர் எழுதுகிறார் என்றால், அவரது கையெழுத்து தெளிவாக இருப்பது அவசியம் என்று இந்திய நீதிமன்றங்கள் கூறுகின்றன.

மருத்துவர்களின் மோசமான கையெழுத்தை, மருந்தாளர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் போன்ற நகைச்சுவைகள் உலகமெங்கும் பகிரப்படுகின்றன.

ஆனால், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்தரவு வெளியிட்டது. அதில், “தெளிவான மருந்துச்சீட்டு என்பது ஒரு அடிப்படை உரிமை” என்றும் அது உயிரோடு இருப்பதற்கும், இறப்பதற்கும் காரணமாக அமையலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com