டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்திருந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
அபிஷாக் ஷர்மா அதிரடியாக 37 பந்துகளுக்கு 75 ரன்களை விளாசியிருந்தார். ஹர்த்திக் நிதானமாக விளையாடி 29 பந்துகளுக்கு 38 ரன்களை எடுத்திருந்தார்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது.
குல்தீப் 3 விக்கெட், வருண், பும்ரா தலா 2 விக்கெட்கள் என வரிசையாக வீழ்த்த 19.3 ஓவர்களில் வங்கதேச அணி மொத்தமாக சுருண்டது.
அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 127 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
நாளை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.