கடந்த (சனிக்கிழமை, செப் 21) துபாயில் நடைபெற்ற ஆசியா கோப்பை 2025 தொடரின் சூப்பர் 4 போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தானை கடுமையாக இகழும்படி பதிலளித்துள்ளார் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
பாகிஸ்தானின் செயல்திறன் மற்றும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வரலாற்றுப் பூர்வமான போட்டி மனப்பான்மை (Rivalry (ரைவல்ரி)) பற்றி கேட்கப்பட்டபோது, “இந்த கேள்வி குறித்து நான் பேச விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் India – Pakistan ரைவல்ரி குறித்து கேட்பதை நிறுத்த வேண்டும்” என்றார் சூர்யகுமார் யாதவ்.