மீண்டும் தோற்ற பாகிஸ்தான்; மீண்டும் கைகுலுக்காத இந்தியா | pakistan again lost match india again no handshake with them

Share

அதிரடி ஓப்பனிங்… நிதான ஃபினிஷிங்!

அதைத்தொடர்ந்து, 172 ரன்கள் என்ற இலக்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இறங்கிய அபிஷேக் சர்மா, சுப்மன் கில் முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக ஆடினர்.

ரன்ரேட் 10-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொண்டு இந்தக் கூட்டணியில் அபிஷேக் சர்மா அரைசதம் அடிக்க, 9 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது இந்தியா.

அபிஷேக் சர்மா, சுப்மன் கில்

அபிஷேக் சர்மா, சுப்மன் கில்
https://x.com/BCCI

அரைசதத்தை நெருங்கி கொண்டிருந்த கில் அடுத்த ஓவரிலேயே 47 ரன்களில் அவுட்டானார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதற்கடுத்த ஓவரிலேயே 0 ரன்னில் அவுட்டானார். அதன்பின்னர் இந்தியாவின் ரன் வேகமும் மெதுவானது.

திலக் வர்மா

திலக் வர்மா
https://x.com/BCCI

அடுத்தடுத்து இரண்டு மூன்று ஓவர்களில் அபிஷேக் ஷர்மாவும் (74), சஞ்சு சாம்சனும் (13) அவுட்டானாலும் நிதானமாக ஆடிய திலக் வர்மா 19-வது ஓவரில் வின்னிங் ஷாட் 4 அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.

லீக் போட்டியைப் போலவே இப்போட்டியிலும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்கவில்லை.

5 சிக்ஸ், 6 ஃபோருடன் 74 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com