சுதர்ஷன் சக்ரா
மேலும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘சுதர்ஷன் சக்ரா’ என்ற பாதுகாப்பு அமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய இறக்குமதிகளுக்கு 50% வரி விதித்தது காரணமாக, உலகளவில் வர்த்தகப் போர் போன்ற சூழ்நிலை நிலவுகிறது.
இந்தியா தனது தேசிய நலன்களில் சமரசம் செய்யாது. அதே நேரத்தில், எந்த நாட்டையும் இந்தியா எதிரியாக கருதுவதில்லை.
உலக அரசியல் நிலையற்றதாக உள்ளதால், தற்சார்பு என்பது ஒரு சாதனை மட்டுமல்ல; அது ஒரு அவசியமாகவும் மாறிவிட்டது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நடத்திய துல்லியமான தாக்குதல்களின் வெற்றி, உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் திறனை எடுத்துக்காட்டியுள்ளது.
2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ. 700 கோடிக்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட ரூ. 24,000 கோடியாக உயர்ந்துள்ளது.
“இது, இந்தியா இறக்குமதியாளர் என்ற நிலையிலிருந்து வளர்ந்து வரும் ஏற்றுமதியாளராக மாறியுள்ளதைக் குறிக்கிறது” என்றார்.