அந்த விக்கெட்டை கடும் ஆக்ரோஷமாகக் கொண்டாடிய சிராஜ், பென் டக்கெட்டின் அருகில் சென்று முறைத்தார்.
அதன்பின்னர் 192 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

இவ்வாறிருக்க, நான்காம் ஆட்டத்தில் பென் டக்கெட்டின் விக்கெட்டை எடுத்த பிறகு அவரிடம் கடும் ஆக்ரோஷமாக செயல்பட்டதற்காக சிராஜுக்கு ஐ.சி.சி அபராதம் விதித்திருக்கிறது.
இது குறித்த அறிக்கையில் ஐ.சி.சி, “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறியதற்காக சிராஜுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன், சிராஜுக்கு ஒரு டிமெரிட் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் அவரின் இரண்டாவது டிமெரிட் புள்ளியாக உயர்ந்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட், சிராஜ் மீதான ஐ.சி.சியின் இத்தகைய நடவடிக்கையை விமர்சித்திருக்கிறார்.
தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஸ்டுவர்ட் பிராட், “இது அபத்தமானது. சிராஜ் ஆக்ரோஷமாகக் கொண்டாடியதற்காக 15 சதவிகிதம் அபராதம் விதித்திருக்கிறார்கள்.
ஆனால், போட்டியில் live-ல் தகாத வார்த்தை பேசிய கில்லுக்கு எதுவும் இல்லை.
ஒன்று இருவருக்குமே அபராதம் விதித்திருக்க வேண்டும். இல்லை, இருவருக்குமே அபராதம் விதித்திருக்கக்கூடாது.
வீரர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல. ஆனால் ஒருநிலைத்தன்மையுடன் இருப்பது முக்கியம்” என்று பதிவிட்டிருக்கிறார்.