“பிளேயிங் லெவன் மாற்றஙகள்!’
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனில் இந்திய அணி நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறது. ப்ளேயிங் லெவனில் பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் ட்ராப் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த மாற்றங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
‘ரவி சாஸ்திரி விமர்சனம்!’
போட்டிக்கு முன்பாக வர்ணனையில் பேசிய ரவிசாஸ்திரி, ‘இந்திய அணியின் தேர்வை பார்க்க சர்ப்ரைஸாக இருக்கிறது. இது மிக முக்கியமான போட்டி. ஒரு வாரத்துக்கும் மேலாக ஓய்வெடுத்துவிட்டு இந்தப் போட்டிக்கு வருகிறீர்கள். ஆனால், அணியில் பும்ரா இல்லை. இதுதான் எனக்கு சர்ப்ரைஸாக இருக்கிறது.