இஸ்ரேல் – இரான் மோதலால் கிருஷ்ணகிரி மாம்பழ ஏற்றுமதி பாதிப்பா? விவசாயிகள் வேதனை

Share

தோத்தாபுரி மாம்பழங்கள், இரான் - இஸ்ரேல் மோதல்

பட மூலாதாரம், paiyurgroup

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் மாம்பழங்களுக்குப் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், இரான்-இஸ்ரேல் மோதலால் மாம்பழ ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான மாம்பழம் மற்றும் மாம்பழக்கூழ் ஏற்றுமதி நடந்து வந்த நிலையில், அதிக விளைச்சல் மற்றும் போர்ச் சூழலால் கொள்முதல் குறைந்துவிட்டதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். மாம்பழ வியாபாரத்தில் என்ன நடக்கிறது?

இந்தியாவில் உத்தர பிரதேசம், ஆந்திரா, பிகார், கர்நாடகா, தெலங்கானா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாம்பழ விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com