ஸ்வர்ணலதாவின் மறக்க முடியாத 15 பாடல்கள்

Share

ஸ்வர்ணலதா

பட மூலாதாரம், X

நாளை, ஏப்ரல் 29ஆம் தேதி பாடகி ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள். எஸ். ஜானகி, சித்ரா போன்ற சிறந்த பாடகர்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அறிமுகமானாலும், தனித்துவமிக்க குரலால் மறக்கவே முடியாத பல பாடல்களை வழங்கியிருக்கிறார் ஸ்வர்ணலதா.

அப்படியான 15 பாடல்களில் தொகுப்பு இது.

1. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா (1987)

தமிழ் சினிமாவில் ஸ்வர்ணலதா பாடிய முதல் பாடல் இது. முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி எழுதி எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ‘நீதிக்கு தண்டனை’ படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த ஸ்வர்ணலதா, எம்.எஸ். விஸ்வநாதனைச் சந்தித்து வாய்ப்புக் கேட்டபோது ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் பி. சுசீலா பாடிய ‘பால் போலவே’ பாடலைப் பாடிக் காண்பித்தார். இதனைக் கேட்ட எம்.எஸ். விஸ்வநாதன், இந்தப் பாடலைப் பாடும் வாய்ப்பை வழங்கினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com