நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா – மத்திய அமைச்சருக்கு ஆ. ராசா சவால்

Share

ஆ.ராசா , வக்ஃப் சட்டத் திருத்த மசோதா , கிரண் ரிஜிஜு

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, இந்த மசோதாவை ஆ.ராசா கடுமையாக எதிர்த்தார்

மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று (ஏப்ரல் 02) தாக்கல் செய்தார். இந்த மசோதா தொடர்பாக மக்களவையில் கடும் விவாதம் நடைபெற்று வருகிறது.

திமுக சார்பில் பேசிய ஆ.ராசா, அம்மசோதாவை கடுமையாக எதிர்த்தார். சட்ட நடைமுறைகளின்படி மத்திய அரசு திருத்தங்களை மேற்கொள்ளவில்லை என கடந்த கால உதாரணங்களை மேற்கோள்காட்டி பேசினார். இந்த மசோதா முஸ்லிம்களின் சொத்துகளை அபகரிக்கும் முயற்சி என ஆ.ராசா பேசினார்.

இன்று நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலைவர்கள் பேசியது என்ன?

கிரண் ரிஜிஜு பேசியது என்ன?

முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் நேற்று இதுதொடர்பாக கூட்டம் நடத்தி, இந்த மசோதாவை எதிர்ப்பதாக முடிவு செய்திருந்தன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com