புதுச்சேரியில் தனியார் `பைக் டாக்சி’ சேவை – வரவேற்கும் மக்கள்; எதிர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

Share

அதேபோல பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, புதுச்சேரியில் டீசல் மட்டுமல்ல வரிகளும் குறைவுதான். ஆனால் இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது போக்குவரத்துத் துறைக்கு கண்டிப்பாக தெரியாமல் இருக்காது. ஆனால் இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத் துறை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டும் அஞ்சுவது ஏன் என்று தெரியவில்லை.

இந்தியா முழுவதும் அனுமதிக்கப்படும் இப்படியான சவாரி நிறுவனங்களுக்கு, புதுச்சேரியில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் ? சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை, பைக் டாக்ஸியில் பயன்படுத்துகிறார்கள் என்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.

பைக் டாக்ஸி

பைக் டாக்ஸி
கோப்புப் படம்

அப்படி என்றால் புதுச்சேரியின் வீதிகள் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து, வாடகைக்கு விடப்படும் ஆயிரக்கணக்கான வண்டிகள் எந்த அடிப்படையில் வாங்கப்படுகிறது ? அவையும் சொந்தப் பயன்பாட்டிற்குதானே வாங்குகிறார்கள் ? அதை மட்டும் எப்படி அனுமதிக்கிறார்கள் ? அவற்றிற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தியதைப் போல, இந்த சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரலாமே தவிர முற்றிலும் தடை செய்வது எப்படி நியாயமாக இருக்கும் ?

இதேபோல உணவு டெலிவரி நிறுவனங்களின் டெலிவரி பார்ட்னர்களுக்கும் தடை விதிப்பார்களா? ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் எங்களுக்கு அப்படி எதுவும் இல்லை. அரசுதான் எங்கள் பக்கம் நிற்க வேண்டும். அதற்காகத்தான் அதை தேர்வு செய்கிறோம்” என்கிறார்கள் அதனை பயன்படுத்தும் சிலர். 

புதுச்சேரி அரசும், போக்குவரத்துத் துறையும் நல்ல முடிவை எடுக்க வேண்டும். இல்லை எனில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பைக் டாக்ஸி கேப்டன்களுக்கும் சாலையில் வாக்குவாதமும் மோதலும் தொடர தான் செய்யும்.!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com