பாம்புகள் கோடையில் வீடுகளை நோக்கி படையெடுப்பது ஏன்? அதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Share

கோடையில் வீடுகளை நோக்கி படையெடுக்கும் பாம்புகள்

பட மூலாதாரம், Getty Images

”நான் இன்று மட்டும் 5 பாம்புகளைப் பிடித்துள்ளேன். நான் பிடித்ததில் கண்ணாடி விரியன், நாகப்பாம்பு ஆகியவை நஞ்சுள்ளவை. பூனைப்பாம்பு, ஆபத்தில்லாத மிதமான நஞ்சைக் கொண்டவை. மற்ற இரண்டும் நஞ்சில்லாத பாம்புகள். என்னைப் போலவே, கோவையில் இருக்கும் பாம்பு மீட்பர்கள் சிலர் 4 அல்லது 5 பாம்புகளை மீட்டுள்ளனர். இது வழக்கத்தைவிட சற்று அதிகம்தான்.”

கோவையில் 27 ஆண்டுகளாகப் பாம்புகளை மீட்கும் பணியை மேற்கொண்டு வரும் அமீன் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல் இது.

பொதுவாக கோடைக் காலங்களில் வீடுகளை நோக்கி பாம்புகள் அதிகளவில் படையெடுக்கும் என்ற கருத்துக்கு பாம்பு மீட்பர்கள் சொல்லும் தகவல்கள் மேலும் வலு சேர்க்கின்றன. ஆனால் கோடைக் காலங்களில் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி அதிகமாக வருவதாக எந்தப் புள்ளி விவரமும் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பாம்புகள் வந்தால் வனத்துறை அல்லது தீயணைப்புத் துறைக்குத் தகவல் தர வேண்டும் என்பதையும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com