எந்திரன் சங்கர்: கோலிவுட்டில் தொடரும் கதைத் திருட்டு சர்ச்சை, ஒரு கதையை முறையாக பதிவு செய்வது எப்படி?

Share

கோலிவுட், கதைத் திருட்டு, தமிழ் சினிமா, பொழுபோக்கு

பட மூலாதாரம், Getty Images

‘கதைத் திருட்டு’ சர்ச்சை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. கடந்த காலங்களில், கத்தி, சர்கார், மெட்ராஸ், லிங்கா, மெர்சல், காப்பான் போன்ற பல பல படங்கள் இதுதொடர்பான சிக்கல்களை சந்தித்துள்ளன. அதில் சில நீதிமன்ற வழக்குகளாகவும் மாறின.

அப்படிப்பட்ட ஒரு வழக்குதான், ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், 2010இல் வெளியான எந்திரன் திரைப்படம் தொடர்பான வழக்கு.

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர், ‘தான் எழுதி, 1997 மற்றும் 2007இல் வெளியான ஜூகிபா என்ற கதைதான் எந்திரன் திரைப்படத்தின் கதை’ எனக் கூறி எந்திரன் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் சார்பாக ஒரு வழக்கும் தொடரப்பட்டது.

அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com