அமெரிக்கா: சட்டவிரோத குடியேறிகள் பிடிபடுவது எப்படி? நாடு கடத்தும் முடிவை எடுப்பது யார்?

Share

சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் அமெரிக்கா, இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னை

பட மூலாதாரம், ANI

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறி மொத்தமாக 104 பேர் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இவர்களில் ஹரியாணா, பஞ்சாப், குஜராத் மாநிலத்தவர்களும் உள்ளடங்குவார்கள். 33 குஜராத்திகள் வியாழனன்று மாலையில் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி புலம் பெயர்ந்து சட்டவிரோதமாகத் தங்கி இருப்பவர்கள் மற்றும் சட்டவிரோதமான வழிகள் மூலம் நாட்டுக்குள் நுழைய முற்படுபவர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வசிக்கும் சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் எதிர் விளைவாகத்தான் ஆமதாபாத் விமான நிலையத்தில் வியாழக்கிழமை பார்த்த காட்சி இருந்தது.

டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டதன் விளைவுகளை நாம் காண்கிறோம். ஆனால், இதிலிருக்கும் கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் வசிப்பவர்களில் யார் திருப்பி அனுப்பப்படுவார்கள், யார் அனுப்பப்பட மாட்டார்கள் என்பதுதான்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com