மகாராஷ்டிரா: கர்ப்பிணியின் 35 வார கருவின் வயிற்றுக்குள் கை, கால்களுடன் இன்னொரு கரு

Share

கருவுக்குள் கரு, மகாராஷ்டிரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இன்றைய (30/01/2025) தமிழ் மற்றும் ஆங்கிலம் நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியமான செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கருவுக்குள் மற்றொரு கரு வளர்ந்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த 35 வார கர்ப்பிணி பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வழக்கமான பிரசவகால பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அந்த பெண்ணின் கருவை பரிசோதனை செய்தபோது, அவருக்கு “கருவுக்குள் கரு” என்ற அரிய வகை பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

பெண்ணின் கர்ப்பப்பைக்குள் குழந்தை கருவுற்றபோது, தவறுதலாக சிதைவுற்ற கரு ஒன்று அந்த குழந்தையின் வயிற்றுக்குள் சென்று தங்கிவிடும். இது பிற்காலத்தில் அந்த குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com