கோவை: மாட்டிறைச்சி கடை போட்ட முஸ்லிம் தம்பதியை பாஜக நிர்வாகி மிரட்டினாரா? என்ன நடந்தது?

Share

மாட்டிறைச்சி கடை

கோவையில் ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில், சாலையோரத்தில் மாட்டிறைச்சி கடை நடத்தக்கூடாது என்று முஸ்லீம் தம்பதியரை மிரட்டிய பாரதிய ஜனதா நிர்வாகியை கைது செய்ய வேண்டுமென்று காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இரு சமுதாயத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடந்திருப்பதால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள உடையாம்பாளையத்தைச் சேர்ந்த ரவி–ஆபிதா தம்பதியினர், சர்க்கார்சாமக்குளம் நடுநிலைப் பள்ளி அருகில் தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி பிரியாணிக் கடை வைத்துள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com