அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு – சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை பற்றி டிஜிபி அறிக்கை

Share

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு அரசியலாக்கப்படுகிறதா

பட மூலாதாரம், Annamalai/Sowmiyaanbumani/X

படக்குறிப்பு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளன

“அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் மட்டுமே உள்ளன. உண்மையான அக்கறையால் அல்ல. பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்?”

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக போராட்டம் நடத்த பாமகவுக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தெரிவித்த கருத்துகளே மேலே உள்ளவை.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மறுநாள் (டிசம்பர் 24) கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், ஞானசேகரன் என்ற நபரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆர் விவரங்கள் சில ஊடகங்களில் வெளியானது முதல் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டங்கள் வரை, அனைத்துமே தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com