சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்தியா அங்கு செல்ல மறுப்பதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் வேறு நாட்டில் நடத்தும் நெருக்கடி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) உருவானது. இதனால், போட்டி அட்டவணையை ICC இன்னமும் வெளியிடவில்லை.
மறுபக்கம், இந்தியா தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என்று கூறிவந்த பாகிஸ்தான், அவர்கள் வரவில்லையென்றால், நாங்களும் இந்தியாவில் ஆட மாட்டோம். இந்தியாவில் நடைபெறும் ICC தொடர்களில் எங்களின் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ICC-யிடம் முன்வைத்ததாகத் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் ICC அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.