திருவாதிரை களி, உருளைக்கிழங்கு அல்வா, ஜவ்வரிசி உருண்டை, தினை அரிசி கேசரி, மருந்து குழம்பு, சுரைக்காய் பாயசம், மஷ்ரூம் சட்னி, மரவள்ளிக்கிழங்கு போண்டா, வெங்காய பொடி சாதம், சிறுதானிய லட்டு, சாமை அல்வா, சிக்கன் விந்தாலி, இறால் ரசம், சப்பாத்தி – கோவைக்காய், குடை மிளகாய் கிரேவி, சிவப்பரிசி பாயசம் உள்ளிட்ட ஏராளமான உணவுகள் நாவூற வைத்தன. அதிலும் 13 வயது போட்டியாளராக கலந்து கொண்ட சிறுமி அஞ்சனா, சிக்கன் கலோடா கபாப், பனீர் தொக்கு பிரியாணி, இளநீர் பாயசம், சவா ரொட்டி, சிக்கன் குழம்பு என வித விதமாக சமைத்து, பெரியவர்களுக்கே டஃப் கொடுத்தார். தன் அப்பா செஃப் என்பதால், சமையல் கலை மீது ஈர்ப்பு வந்ததாக கூறி அனைவரையும் கவர்ந்தார்.
போட்டியின் நடுவர் செஃப் தீனா உணவை ருசிபார்த்து மதிப்பெண்களை வழங்கினார். முதல் சுற்றில் தீனா தேர்வு செய்த 10 போட்டியாளர்கள் இரண்டாவது சுற்றான நேரடி சமையலில் பங்கேற்றனர். மேலும் புனிதா, உஷா கிருஷ்ணகுமார் என்ற இரண்டு போட்டியாளர்களும் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன.