முதற்கட்டமாக, உடனே ஒரு சரும மருத்துவரை அணுகித் தனிப்பட்ட முறையில், உங்களின் சரும வகை என்ன, சருமத்தில் இயற்கையாகவே இருக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
மருத்துவர்களுடன் இணைந்து உங்களுக்கான ஸ்கின் கேர் ரொட்டீனுக்கான கால அட்டவணையை உருவாக்க வேண்டும்.
மேலும், அவர்கள் பரிந்துரை செய்யும் கிளென்சர்கள், மாய்ஸ்ச்சரைசர்கள், சீரம்களையே உபயோகப்படுத்தவேண்டும்.
பளிங்குபோல் பளிச் சருமம் சாத்தியமா?
உங்கள் சருமத்தின் தன்மையை மேம்படுத்த, வெறும் வெளிப்பூச்சுகள் மட்டுமே போதாது. உணவு முறை, உடலின் செயல்பாடு, வாழ்க்கை முறை என எல்லாவற்றிலும் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியம். அத்துடன், மருத்துவர்கள் பரிந்துரை செய்த சருமப் பராமரிப்பு பொருள்களை தொடர்ந்து உபயோகிப்பதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
சருமத்தைத் துன்புறுத்தும் கெமிக்கல்ஸ் அற்ற கிளென்சரை தேர்வு செய்து, நாளுக்கு இரண்டு முறை (காலை-மாலை) முகத்தை சுத்தம் செய்யவும்.
முகத்தை கிளென்சரை கொண்டு சுத்தம் செய்த பிறகு, முகத்தின் டோனரை தடவவேண்டும், அதற்கு பின் மாய்ஸ்ச்சரைசர் தடவ வேண்டும், இதன் மூலம் முகத்தில் ஈர்ப்பதத்தைத் தக்கவைக்க முடியும்.
மேலும், உங்களின் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றுவதற்கு வாரம் 2 முறை முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக்கொள்ளலாம் அல்லது பால், கடலைமாவு போன்ற வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே சில பராமரிப்பு வழிமுறையை மேற்கொள்ளலாம்.
குறிப்பாக, வெளியே செல்லும்போது சன்ஸ்க்ரீனை உபயோகப்படுத்த மறந்துவிடாதீர்கள்.